சதுரகிரியில் இன்று தரிசனத்துக்கு தடை விதிப்பு

சதுரகிரி: தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இன்று தரிசனத்துக்கு தடை ..... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று.

இதனை அடுத்து இந்த சூழலில் சதுரகிரி மலைப்பகுதியில் நாவல் ஊத்து பகுதியில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து கொண்டு வருகிறது.

ஆடி மாத பிறப்பு மற்றும் அமாவாசை தினத்தை ஒட்டி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று வருகை தந்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மலைப்பகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு இன்று செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.