பூரி ஜெகநாதர் கோயிலுக்கு செல்போன் கொண்டு வர தடை விதிக்க முடிவு

ஒடிசா: ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலுக்கு செல்போன் கொண்டு வர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள கோவில்களில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலுக்கு செல்போன் கொண்டு வர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (ஜனவரி) 1ம் தேதி முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என ஜெகநாதர் கோவிலின் முதன்மை நிர்வாகி வீர் விக்ரம் யாதவ் தெரிவித்துள்ளார்.