11 நாட்களில் சபரிமலையில் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலைஅய்யப்பன் கோவிலில் கடந்த 11 நாட்களில் 6 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்ததுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பக்தர்கள் வாயிலாக கோவிலுக்கு 10 நாட்களில் ரூ.52½ கோடி வருவாய் கிடைத்தது. இதில் அப்பம்-அரவாணி விற்பனை மூலம் மட்டும் ரூ.26 கோடி கிடைத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் கடந்த 16-ந்தேதி மண்டல, மகரவிளக்கு சீசனில் திறக்கப்பட்டது.

17ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் பூஜைகள் நடக்கிறது. பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

17ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் பூஜைகள் நடக்கிறது. பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் சபரிமலை வரும் 30ம் தேதி வரை 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்கள் தினமும் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். மொத்தம் 89,530 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.


கடந்த சனிக்கிழமை 78 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இன்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 29,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.