திருப்பதியில் கருட வாகன சேவை வீதியுலா இல்லாமல் நடந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கருட பஞ்சமி நாளன்று ஏழுமலையானின் கருடவாகன சேவை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக திருவீதி உலா இல்லாமல் நடந்துள்ளது.

கருட பஞ்சமி நாளான இன்று ஏழுமலையானின் கருட வாகன சேவை திருப்பதி மலையில் நடைபெற்றது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன சேவை திருவீதி உலா இல்லாமல் இன்று நடைபெற்றது.

கருட வாகன சேவையை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் உள்ள ரங்க நாயக்கர் மண்டபத்தில் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து உற்சவருக்கு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கருட வாகன சேவை நிறைவு பெற்றது.