நாளைய இலவச தரிசனத்துகான டோக்கன் வழங்குவது தற்காலிக நிறுத்தம்

தற்காலிகமாக நிறுத்தம்... நாளைய இலவச தரிசனத்துகான டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச டோக்கன் பெறுவதற்காக, பக்தர்கள் ஒரு நாளுக்கு முன்னரே வந்து வரிசையில் காத்து நிற்கின்றனர். அப்போது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பக்தர்கள் நிற்பதால், கொரோனா தொற்று பரவும் அபயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள், திங்கட்கிழமை வழங்கவேண்டிய இலவச டோக்கன்களை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இலவச டோக்கன்களை நேரடியாக வழங்குவதா அல்லது, ஆன்லைன் மூலம் வழங்குவதா என்பது குறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.