திருப்பதி கோயில் பிரமோற்சவ விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்... திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்து இயக்க இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள “பிரம்மோத்ஸவம்” திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13/10/2023 முதல் 26/10/2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

மேற்கண்ட இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.