பழனியில் ரோப்கார் இன்று முதல் மீண்டும் இயக்கம்

பழனி : பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரோப்கார் சேவை, இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு .....

இதனை அடுத்து கோயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்‌,

பழனி பத்திரிக்கை குறிப்பு நாள்‌.- 07.10.2023 பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின்‌ கம்பிவட ஊர்தி சேவை கடந்த 19.08.2023 முதல்‌ பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது பராமரிப்பு பணிகள்‌ அனைத்தும்‌ நிறைவுற்று இன்று 08.10.2023 முதல்‌ பக்தர்கள்‌ பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது என்ற விபரம்‌ பக்தர்களுக்கு அன்புடன்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.