ஆடி மாத பூஜை சபரிமலை ...பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதனையடுத்து வழக்கத்தை விட மிக அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களின் வசதிக்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.