தமிழகத்தில் இருந்து வரும் 26ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி : திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து மேலாண் இயக்குநர் வெளியிட்டு உள்ள தகவலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டு முறை பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெறவுள்ளது.


எனவே இந்த திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் 2-வது முறையாக நடைபெற உள்ள பிரம்மோத்ஸவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் இன்று முதல் வருகிற 26ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளது.

எனவே மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.