தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு

சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் .... தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. இதையடுத்து வாரத்தின் தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனை ஆனது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது.அந்த வகையில் ஒரே நாளில் வரலாறு காணாத அளவில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய தங்கம் விலை உயர்வால் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.82.20க்கும், கிலோ வெள்ளி ரூ.82,200க்கும் விற்பனையாகிறது.