தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 உயர்வு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4709 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 672க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 2.30 ரூபாய் உயர்ந்து 59.70ரூபாய்க்கு விற்பனையாகிறது.