உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை 38 நாளில் 6 ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,420 ஆக விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.20 அதிகரித்து ரூ.83.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.