மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலையானது 46ஆயிரத்தை எட்டியது.

இதையடுத்து இது சாமானியர்கள் மத்தியில் மிக பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தினசரி தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 1 கிராம் தங்கத்தின் விலை 5, 445 ஆக உள்ளது.


எனவே இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 43 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று, வெள்ளி விலை கிராமுக்கு 0.50 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,500 ஆக உள்ளது.