தங்கம் ஒரு பவுன் ரூ.41,000க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,125க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.71.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.