இதற்காக கூகுளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்

இந்தியா: கூகுளுக்கு அபராதம்? .... இந்திய போட்டி ஆணையம் 3வது முறையாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் டி.வி. சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக கூகுளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்.

இந்திய போட்டி ஆணையம் கடந்த அக்டோபர் 20ம் தேதி கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதன் ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.

அதற்கு அடுத்த ஒரு வாரத்துக்குள், கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய போட்டி ஆணையம் ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.

இதனை அடுத்து சமூக ஊடக தளமான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த வாரம் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, மெட்டா நிறுவனத்தில் உலகம் முழுவதுமாக பல்வேறு தளங்களில் மொத்தம் 87 ஆயிரத்துக்கும் அதிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த வாரம் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை தொடங்குவதை கருத்தில் கொண்டு, இந்த வாரம் முதல் அத்தியாவசியமற்ற பயணத்தை ரத்து செய்யுமாறு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே ஊழியர்களுக்கு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.