சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: உலகம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அதாவது, நாட்டில் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைவதால் தான் தங்கத்தின் விலை திடீரென உயர்வதும், அதிரடியாய் குறைந்தும் வருகிறது. இதை அடுத்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருந்து வருகிறது.

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு உயர்ந்ததால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது. இதை அடுத்து இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து, ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.