சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

சென்னை: ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது.

அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இக்காரணத்தால் உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இந்த நேரத்தில் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்ந்துள்ளது. மேலும் தங்கத்தின் மீதான GST வரி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை அடுத்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. எனினும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதேபோன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.