சென்னையில் இன்றை ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: உலகம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அதாவது, நாட்டில் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைவதால் தான் தங்கத்தின் விலை திடீரென உயர்வதும், அதிரடியாய் குறைந்தும் வருகிறது. இதை அடுத்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,890க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.00க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் சென்னையில் இன்று அதிரடியாய் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.4,914 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இத்துடன் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80 காசு அதிகரித்துரூ.64.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் கிலோவிற்கு ரூ.64,800 க்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.