ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.

நேற்று முன்தினம் வரை தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ. 5 குறைந்து ரூ4,835க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,680க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன் படி இன்று 22 கேரட் தங்கம் கிராம் ரூ. 4,840க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதே போல சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.66க்கு விற்பனையாகிறது.மேலும் பண்டிகை காலத்தை ஒட்டி நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.