ஷெல் இந்தியா தனியார் நிறுவனம் டீசல் விலையை உயர்த்தியது

புதுடில்லி: டீசல் விலை உயர்த்திய ஷெல் நிறுவனம்... தனியாா் துறையைச் சோ்ந்த எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான ஷெல் இந்தியா, கடந்த ஒரு வாரத்தில் தனது விற்பனையகங்களில் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.20 வரை உயா்த்தியுள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த விற்பனை நிறுவனங்கள் தொடா்ந்து 18-ஆவது மாதமாக பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும், சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 90 டாலருக்கு சற்று உயா்ந்தும், குறைந்தும் வரும் நிலையில், ஷெல் நிறுவனம் தனது எரிபொருளின் விலையை கடந்த வாரம் முதல் லிட்டருக்கு ரூ.4 வீதம் தினமும் உயா்த்தி வந்தது.

புதன்கிழமை நிலவரப்படி சென்னையிலுள்ள ஷெல் விற்பனையகங்களில் டீசல் ரூ.129-க்கு விற்பனையானது.