தொடர்ந்து உயரும் ஆபரணத்தங்கத்தின் விலை


சென்னை: தமிழகத்தில் நேற்றை தொடர்ந்து இன்றும் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 40 உயர்வு ...இந்தியாவில் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் விலை தின்தோறும் மாற்றமடைந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு மாத தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ. 5,985-க்கு விற்பனை செய்யப்பட்டது.


இதையடுத்து அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்த்து சவரன் ரூ. 47,920-க்கும் கிராம் ரூ.5,9990-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி 50 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.78.00க்கும் கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 2வது நாளாக உயந்துள்ள தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் சற்று கவலை அடைந்து உள்ளனர்.