ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிரடியாக விலை ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து கொண்டு வருகிறது. அவ்வப்போது விலை குறைந்தாலுல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 38 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, தற்போது 43 ஆயிரம் ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை உயர்ந்தது. இருப்பினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை சரிவை சந்தித்து, அதன் பின்னர் 29, 30 ஆகிய தேதிகளில் விலையில் மாற்றம் எதுவுமின்றி விற்பனையானது.

இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.96 குறைந்து, ஒரு சவரன் ரூ.42,704க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது. எனவே அதன்படி கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,360க்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு சவரன் ரூ.42,880க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 74 ஆயிரத்து 800 ஆக விற்கப்படுகிறது.