இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு விற்பனை ... தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து 1 கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமிற்கு 50 பைசா அதிகரித்து ரூ.80.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.500 அதிகரித்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் எந்த வித மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 1 கிராம் ஆபரண தங்கம் 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் விலை குறையும் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.