சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த
தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால்
அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மக்கள் சந்தோஷத்தில்
இருந்தனர். ஆனால் நேற்றும் இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் இன்று (செப்.23)
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து
ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,690க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அது மட்டுமில்லாமல் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை
செய்யப்படுகிறது. அதனால் மக்கள் தங்க நகை வாங்க தயக்கம் காட்டி வந்தாலும்
தீபாவளிக்குள் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.