சென்னை: ஆபரணத் தங்கம், என்பது அணிகலனாக மட்டுமில்லாமல் சிறந்த முதலீடாகவும் உள்ளது. கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் அனைத்து வகையான முதலீடுகளும் சரிவை சந்தித்தது. இதனால், முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சிக்கலை அடைந்தனர்.
ஆனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் மட்டும் எவ்வித இறக்கமும் இல்லாமல் எப்போதும் போல் வழக்கமான நிலையில் இருந்து வந்தது.இதனால், தங்கத்தின் மீதான முதலீடுகள் உயர தொடங்கியதால், அதற்கான தேவையும் அதிமாகியது. எனவே, தங்கத்தின் விலை இத்தனை வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.