நடிகர் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல்

சென்னை: நடிகர் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார்.

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளன. 'பத்து தல' படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கெளதம். இதனை 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து ஊடகங்களில் இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனராம். இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.