கவனம் ஈர்த்துள்ளது நயன்தாராவின் அன்னபூரணி

நடிகை நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இதையடுத்து இதில், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான இந்த படத்தை (அன்னபூரணி) அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார்.


ட்ரைலரை வைத்து பார்க்கையில், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, இறைச்சி சமைப்பதில் உள்ள சவாலை சமாளித்து, இந்தியாவிலேயே ஒரு சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற தனது கனவை வளர்த்து வருகிறார். அதன் பின்னர், சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற நயன்தாராவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் கதை.

இதனை அடுத்து இதில், எந்தக் கடவுளும் கறி சாப்பிட்டா தப்புன்னு சொன்னதில்லை என்று ஜெய் பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது. அது மட்டும் இல்லாமல், “புடிச்சதா பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம்” என நயன்தாரா சொல்லும் வசனும் கவனம் ஈர்த்துள்ளது.

நயன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இறைச்சியை சமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் உணவு சார்ந்த அரசியல் அவ்வப்போது பேசுபொருளாகும். அதை உடைத்துப் பேசும் படமாக அன்னபூரணி இருக்கும் என்று பெரும் எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.