அப்பாவை கிண்டல் செய்ததை கண்டித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபல நடிகர்

மும்பை: என்னை பற்றி கிண்டல் செய்யுங்கள். என் அப்பா கிண்டல் செய்யாதீர்கள் என்று கோபத்துடன் கூறி வெளியேறி உள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

ஹிந்தி திரையுலகின் சூப்பர் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் அமிதாப் பச்சன். 80 வயதிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் பல கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார். அவரது வாரிசான அபிஷேக் பச்சனும் முன்னணி நடிகராக மாறி நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அபிஷேக் பச்சன் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை இந்தி நடிகரும் நடிகையுமான ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கபிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அப்போது ஒருவர் அமிதாப் பச்சனைப் பற்றி கேலி செய்தார். இதனால் கோபமடைந்த அபிஷேக் பச்சன், “இதை நிறுத்து… என்னை கிண்டல் செய். என் தந்தையை கேலி செய்வது நல்லதல்ல” என்று கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். என்ன நடக்கிறது என்பதை அங்கிருந்தவர்கள் அறிந்து கொள்வதற்குள் அபிஷேக் பச்சன் அங்கிருந்து சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.