‘புஷ்பா 2’ படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் பற்றி வெளியான தகவல்

ஹைதராபாத்: இவ்வளவு சம்பளமா?... சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில் மற்றும் பலர் நடித்த படம் ‘புஷ்பா’. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா ஆடியிருந்தார். 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஆனால், இந்த படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் சம்பளம் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்தை தர ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கபடும் இந்தப் படம் நிச்சயமாக ரூ.1000 கோடியை எட்டும். அதனால் அல்லு அர்ஜுனுக்கு ரூ. 330 கோடி சம்பளம் வாங்குவதாக தெலுங்கு சினிமாவில் சொல்லி வருகிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்பு தரப்பு எதுவும் கூறவில்லை. இது உண்மையாக இருந்தால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பார்.