ஒரு காட்சிக்காக ஒரு மாதமா... சிம்பு முடிவால் தலையை பிய்த்துக் கொள்ளும் பத்து தல படக்குழு

சென்னை; நடிகர் சிம்பு கூறிய பதிலால் பத்து தல படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பத்து தல எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு தான் இணைந்ததாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சிம்பு படப்பிடிப்பு முடிவதற்குள் சென்னை திரும்பி விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஏனென்றால், படத்தில் ஒரு காட்சியில் சிம்பு காரில் இருந்து இறங்கி சட்டையை கழட்டிவிட்டு விமானத்தில் ஏறுவது போல இருந்ததாம். இந்த காட்சியை இயக்குனர் கிருஷ்ணா சிம்புவிடம் சொன்னாராம். இதனால், சிம்பு தனக்கு 1 மாதம் வேண்டும் டைம் கொடுங்க. ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியான இயக்குனர் சட்டையை கழட்டவேண்டாம் சார் சும்மாவே எடுத்துக்கொள்வோம் என்று கூறினாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த சிம்பு இந்த காட்சி நன்றாக இருக்கும். அதனால் நான் 1 மாதம் கழித்து வருகிறேன் என்று சென்னை வந்துவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறதாம் பத்து தல படக்குழு.