சைலண்டாக மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள போர்த் தொழில் படம்

சென்னை: சைலண்டாக படு மாஸ் வசூல் வேட்டை நடத்தி உள்ளது போர் தொழில் படம். இதுவரை ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

திருச்சியில் தொடர்ந்து ஒரே மாதிரியான சில இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள், இந்த கொலை சம்பவம் எப்படி நடக்கிறது என்பதை விசாரிக்கும் படமாக அமைந்துள்ளது போர் தொழில்.
ஒரு முழுமையான க்ரைம் த்ரில்லர் படமாக இப்படம் அமைந்துள்ளது. மக்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் கடந்த ஜுன் 9ம் தேதி வெளியாகி இருந்தது.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் இதுவரை ரூ. 30 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. சைலண்டாக இப்படம் நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது.