அண்ணனுடன் நடிக்க மறுப்பு தெரிவித்த நடிகர் கார்த்தி

சென்னை: அண்ணனுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி என்று தெரிய வந்துள்ளது.

பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கார்த்தி. சிவகுமாரின் மகன் மற்றும் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் அறிமுகமான கார்த்தி முதல் படத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.

முதல் படம் போல இல்லாமால் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்ளை அசத்தினார். அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார் கார்த்தி.

என்னதான் அதன் பின் இடையில் சில தோல்விகளை கார்த்தி சந்தித்தாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பினார். அதைத்தொடர்ந்து தோழா, தீரன், கைதி என தரமான படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் படம் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது

மேலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகின்றார் கார்த்தி. இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படமான ஆயுத எழுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பை கார்த்தி நிராகரித்ததாக சமீபத்தில் பேசியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் தன்னை ஆயுத எழுத்து படத்தில் நடிப்பதற்காக அழைத்ததாகவும், ஆனால் கார்த்தி தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை இயக்கத்தில் தான் ஆர்வம் இருக்கின்றது என்று சொன்னதாகவும் கூறியுள்ளார். அதன் பின் அதே படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக கார்த்தி பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் நடிக்க மறுத்த பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்ததாக கார்த்தி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.