இயக்குனர் வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகர் நிதின் சத்யா

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா, தீபாவளி ஸ்பெஷல்..மறைந்திருக்கும் திறமை” என்று கூறியுள்ளார்.


பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை-28 படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் தனது இயக்கத்தில் வெளியான மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மதலீலை போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது நாகசைதன்யா நடிக்கும் என்சி22 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா,என்சி22 இயக்குனர் வெங்கட் பிரபுவின் தீபாவளி ஸ்பெஷல்.. மறைந்திருக்கும் திறமை என்று கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.