நடிகர் ரஜினிகாந்த் மும்பை விரைந்தார்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று கொண்டு வருகிறது. லீக் போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன.இதையடுத்து நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இதேபோன்று 2-வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து உள்ளன. 4-வது இடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

எனவே அதன்படி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து போட்டி இன்று நடைபெறும் நிலையில் போட்டியை நேரில் கண்டு ரசிக்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை விரைந்தார்.