நடிகர் ராம் சரண், உபாசனா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

11 வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது ..... பிரபல நடிகர் சிரஞ்சிவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனாவிற்கு இன்று அதிகாலை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

கடந்த ஜூன் 19 நேற்று மாலை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த உபாசனா இன்று காலை பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

11 வருடங்கள் கழித்து குடும்பத்தில் புது வாரிசு ஒன்று நுழைந்ததால் மெகாஸ்டார் சிரஞ்சிவி குடும்பமே பெரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்ந்து உள்ளது.

அதனால் இப்போது, ராம்சரண் மற்றும் உபாஸ்னாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டு ‘RRR’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றதாலும், இப்போது புதிதாகப் பிறந்த பெண் குழந்தையாலும் ராம் சரண் குடும்பத்தில் கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் அனைத்தையும் இரட்டிப்பாக்கி உள்ளது.