எமிரேட்ஸ்: நடிகர் ஷாருக்கானுக்கு சினிமா மற்றும் கலச்சார துறையில் சாதித்ததற்காக உலகளாவிய ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் செம வைரலாக்கி வருகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சினிமா மற்றும் கலச்சார துறையில் சாதித்ததற்காக உலகளாவிய ஐகான் விருது வழங்கப்பட்டது.
காட்சி ஊடகத்தின் வழியே எழுத்து, படைப்பாற்றல் துறையில்
சாதித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட
ஷாருக்கான் பேசியதாவது, கதைகள், சொற்கள் அவை சேர்ந்ததுதான் சினிமா. நாங்கள்
காட்சிகள் மூலமாகவும், நடனத்தின் மூலமாகவும் மனிதநேயத்தை வளர்க்க
நினைக்கிறோம் என்று பேசினார்.
சமீபகாலமாக
ஷாருக்கானுக்கு மத்திய கிழக்கு, அமெரிக்கா நாடுகளில் ரசிகர்களின் எண்ணிக்கை
அதிகரித்திருக்கிறது என்று பிரபல நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில்
தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.