ஆயுர்வேத சிசிக்சை மேற்கொள்ளும் நடிகர் சிம்பு

கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் மாறாத அழகு ரகசியம் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையிலான ஆயுர்வேத பொருட்களையே இதுவரை பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர். முகப்பரு இல்லாத பூரண பொலிவுக்கும் அதுதான் காரணமாம்.

கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்டு, மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் என்ற தகவல்கள் வைரலானது. இந்நிலையில், நடிகர் சிம்பு கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷனி, மனோஜ் பாரதிராஜா என ஏகப்பட்ட நடிகர்கள் கூட்டணியில் இயக்குநர் வெங்கட் பிரபு ஆட உள்ள அரசியல் விளையாட்டு படமான மாநாடு படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.