நடிகர் பிரித்விராஜை சந்தித்த நடிகர் சூர்யா, ஜோதிகா

சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகாவை மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று கதை என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கி படத்தை தயாரித்து வருகிறார்கள்.

மேலும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி67 படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக நிச்சயம் வருவார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகாவை மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த போட்டோ வைரல் ஆகி வரும் நிலையில், இந்த சந்திப்பு தளபதி 67 செட்டில் நடந்ததா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.