நடிகர் விஜய் சென்னை ,நீலங்கைரையில் உள்ள தனது வீட்டில் இன்று தேசியக்கொடி ஏற்றனார்

சென்னை: நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. எனவே இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இதையடுத்து இதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு ஒன்றை விடுத்து இருந்தார்.

மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார்.இதனையடுத்து மத்திய மந்திரிகள்,உள்பட பல தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.சென்னை நீலங்கைரையில் உள்ள அவரது வீட்டில் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.மேலும் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது