நடிகர் விஜய் சேதுபதியின் அதிரடி... ரசிகர்கள் எழுப்பும் கேள்வி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சொன்னதாக ஒரு தகவல் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏதாவது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகப் போகிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்திற்கு அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் அனுகீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், பிக் பாஸ் ஷிவானி மற்றும் சாந்தினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில்தான் விஜய் சேதுபதி நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.