சந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய்

சென்னை: நடிகர் ரஜினியின் சந்திரமுகி படத்தில் சந்திரமுகியாக முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம். ஆனால் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகுதான் அந்த வாய்ப்பு ஜோதிகாவுக்கு போய் சேர்ந்துள்ளது.

1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கல்கியின் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து இருப்பார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம். ஆனால் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.