பிரசவ காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் நடிகை அனுஷ்கா ஷர்மா!

பிரசவ காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் தலைகீழாக நின்று யோகாப் பயிற்சி செய்ய, விராட்கோலி அவருக்கு உதவும் வண்ணம் அவரின் காலை பிடித்துள்ளார்.

அந்தப் பதிவில் அனுஷ்கா சர்மா கூறியதாவது:- எனது வாழ்வில் யோகாவிற்கு முக்கியப்பங்கு உண்டு. திரும்புதல் மற்றும் அதிக அளவு முன்னோக்கி வளைதல் போன்ற ஆசனங்களை மட்டும் தவிர்த்து விட்டு, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக நான் செய்து வந்த அனைத்து யோகாசனங்களையும் நான் தொடர்ந்து செய்யலாம் என்று மருத்துவர் எனக்கு பரிந்துரைத்தார்.

சிரசாசனத்தை நான் பல ஆண்டு காலமாக செய்து வருகிறேன். சுவரின் உதவியோடு இந்த ஆசனத்தை செய்த நான், கூடுதல் பாதுகாப்பிற்காக எனது கணவரின் உதவியை கைக்கொண்டேன். யோகாப் பயிற்சியை பிரசவ காலத்திலும் தொடர்வது எனக்கு மகிழ்ச்சிகரமானதாவே உள்ளது. சிரசாசனம் ஆசனங்களில் கடினமான பயிற்சியாகும் எனக்கூறியுள்ளார். அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.