ராஜா ராணி -2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அறிவிப்பு

சென்னை: விலகுவதாக அறிவிப்பு... விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ராஜா ராணி தொடர் ரசிகர்களிடையே மிக பிரபலம். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

முதல் பாகத்தின் பெரும் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகம் ஒளிரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் முதல் பாகத்திலிருந்து ஆல்யா மானஸா மட்டும் நடிக்கத் துவங்கினார். ஆனால் சில காரணங்களால் அவர் பாதியில் விலக அவருக்க பதிலாக ரியா விஸ்வநாத் நடிக்கிறார்.

இந்தத் தொடரில் விஜே அர்ச்சனா முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். ராஜா ராணி 2 தொடர் மூலம் அவரை ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்ரனர். இந்த நிலையில் அவர் திடீரென இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.