செம்பருத்தி சீரியல் பிரபலம் திடீர் மரணம்...கதறி அழுத நடிகை

செம்பருத்தி சீரியலின் பிரபலம் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கண்ணீருடன் கதறி அழுத வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடர் கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்திற்குரிய தொடர் என்பதும் இந்தத் தொடர்தான் ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

கார்த்திக் ராஜ், ஷபானா முக்கிய வேடங்களில் நடித்துவரும் இந்தத் தொடரின் ஒளிப்பதிவாளர் அன்பு திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை பரதா நாயுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

செம்பருத்தி தொடரின் கேமராமேன் அன்பு காலமாகி விட்டதை சற்று முன் தான் நான் அறிந்தேன். இந்த தொடரில் நான் ஒன்றரை வருடங்களாக பயணம் செய்து வருகிறேன். இந்த தொடரில் நிறைய அரசியல் இருந்தாலும் எனக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் மட்டுமே இருந்தனர்.

ஒளிப்பதிவாளர் அன்பு அவர்களிடம் ஒரு சில நாட்களுக்கு முன்னர் கூட பேசினேன். அவரைப்பற்றிய இப்படி ஒரு செய்தி வரும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனக்கு நிறைய அட்வைஸ் தருவார். உன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன பேசினாலும் கவலைப்படாதே, நீ சாதிப்பதை மட்டுமே யோசி, உன்னை சுற்றி உள்ளவர்கள் உன் வளர்ச்சியை தடுத்தால் நீ ஏதோ சாதித்து கொண்டிருக்கிறாய் என்று அவர் ஆறுதல் கூறுவார். அவரை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று பரதா நாயுடு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்