நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல்

சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டார் சீரியல் மூலம் மிக பிரபலமடைந்தார். இவருக்காகவே அந்த சீரியல் பெரும்பாலானோர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்கொலை என தெரியவந்துள்ளதால், அதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை சித்ரா மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் நடித்த சக நடிகர்கள் உள்பட மற்றும் பல நடிகர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது வருங்கால கணவருடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.