திருமணத்திற்கு பின்னர் பிசியாக நடிக்க தொடங்கியுள்ள நடிகை ஹன்சிகா

சென்னை: திருமணத்திற்கு பின் நடிகை ஹன்சிகா மீண்டும் பிசியாக நடிக்க துவங்கி விட்டார். இப்போது ஒரு பேய் படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமணத்திற்கு பின் ஆதியுடன் நடிகை ஹன்சிகா நடித்த பாட்னர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. தற்போது ஹன்சிகா கார்டியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்குகிறார்கள். சாம். C. S இசையமைக்கிறார்.

சுந்தர் C இயக்கத்தில் 2016 ல் வெளிவந்த படம் அரண்மனை -2. இந்த படத்தில் பேயாக நடித்திருப்பார் ஹன்சிகா. இந்த படமும் ஹன்சிகாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மீண்டும் பேயாக கார்டியன் படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார் ஹன்சிகா. போஸ்டரில் பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர தயாராகி வருகிறார் ஹன்சிகா.