தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகை ஜோதிகா!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது சென்றதாகவும் அப்போது அந்த மருத்துவமனை பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை பார்த்ததாகவும் கோவில்களுக்கு செலவழிப்பது போல மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கும் செலவு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வந்தது. ஒருசிலர் அவர் பேசியதன் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ஜோதிகா கூறியதாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் ஜோதிகா தான் குறிப்பிட்ட அதே தஞ்சை மருத்துவமனைக்கு தற்போது ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

உரிய வசதிகள் இன்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ.25 லட்சம் நன்கொடையாக நடிகை ஜோதிகா வழங்கியுள்ளார். மேலும் குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் நடிகை ஜோதிகா உதவியுள்ளார்.

இதனையடுத்து ஜோதிகாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.