வதந்திகளுக்கு ஒரே டுவிட்டில் முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூமிகா

தன் மீதான வதந்திகளுக்கு ஒரு டுவிட் போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பூமிகா.

விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து 'ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம்' உள்ளிட்ட சில தமிழ்ப படங்களில் நடித்தார். தற்போது 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார்.

தமிழை விட தெலுங்குப் படங்களில்தான் பூமிகா அதிகம் நடித்துள்ளார். பூமிகா அவருடைய யோகா குருவான பரத் தாக்கூர் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீப காலமாக அவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பூமிகா. தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு கணவர் பரத் தாக்கூருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைத்திற்கும் நன்றி. நம்முடைய இணைந்த பயணத்திற்கு கடவுள் ஆசீர்வாதம் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.