அச்சு அசலாக மறைந்த நடிகை சித்ரா போலவே உடை உடுத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை டிவி நடிகை கீர்த்தனா. இதனால் இவர் முல்லை கேரக்டரில் நடிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
எனவே, முல்லை வேடத்தில் யார் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது. அதேநேரம், அவர் இறந்துவிட்டது போல் காட்சியை அமைக்க படக்குழு
திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில்,
சின்னத்திரை நடிகை டிவி நடிகை கீர்த்தனா சித்ராவை போலவே புடவை அணிந்தும்,
அவர் போலவே போஸ் கொடுத்தும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் நீங்கள் அப்படியே சித்ரா
போலவே இருக்கிறீர்கள். நீங்களே முல்லை வேடத்தில் நடிக்கலாம் என கூறி
வருகின்றனர்.