முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரிய படுத்தியுள்ளார் நடிகை நயன்தாரா


தமிழில் மிகவும் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து உள்ள நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படம் வருகிற செப்.7 அன்று திரைக்கு வருகிறது. இதனை அடுத்து நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு தொடங்காமல் இருந்து வந்தார்.

இதையடுத்து அவரது பெயரில் பல்வேறு போலி கணக்குகளிருந்து வந்த நிலையில், பல பேட்டிகளில் நயன்தாரா தான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என கூறி வந்தார். அவரது புகைப்படங்களை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து உள்ளார். மேலும் அதில் முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவரை ஏராளமானோர் பின் தொடர்ந்து கொண்டு வருகின்றனர்.